மொரீஷியஸ் பற்றி எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டன. அது ஏன்... ஏழுதியே வெகு நாட்கள் ஆகி விட்டன. இன்று நாளை என்று எழுதாமல் தள்ளிபோட்டுக்கொண்டே வந்த விஷயம் (சோம்பேறி தனம் தான்!).
பொதுவாக மொரீஷியஸில் தமிழ் என்பது அந்த ஊர் ரூபாய் தாள்களிலும் (அந்த ஊரிலும் ரூபாய் (Rupee) தான்), கோவில்களிலும் மட்டுமே காண கிடைக்கும். மூண்றாம் தலைமுறை தமிழ் வம்சாவழியினர் இங்கு வாழ்கின்றண்ர். இவர்கள் சுத்தமாக தமிழை மரந்து விட்டனர். ஆனால் தமிழர் பண்டிகைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
சென்ற வருட (2009) தமிழ் புத்தாண்டிற்கு நான் மொரீஷியஸில் இருக்க நேர்ந்தது. அதே நாளில் வேறு ஒரு கிருத்துவ விசேஷமும் சேர்ந்து வர, நாடு முழுவதும் விடுமுறை. தெலுங்கு புத்தாண்டிற்கு விடுமுறை விட்டார்கள். தமிழுக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேட்டதற்கு, அடுத்த வருடம் விடுவார்கள் என்றார்கள்.ஒரு வருடம் தமிழுக்கு மறு வருடம் தெலுங்கிற்காம். தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு படங்களும் இப்படித்தான் ஒளிபரப்பாகும். ஒரு திங்கட்கிழமை அன்று தமிழ் படம், மறு வாரம் தெலுங்கு படம் என்று. ஆனால் வாரம் முழுவதும் ஏதாவது ஒரு பழைய தமிழ் மெகா தொடர்களை ஒளிபரப்புவார்கள்.
ஏப்ரில் 14 விடுமுறை என்பதால் முந்தினமே வாங்கி வந்த Bottle உடன் தொலைக்காட்சி முன்பு அமர்ந்தேன். (ஹி... ஹி... வேற என்ன வேல?) மொரீஷியஸில் இருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகள் நடத்திய விழாக்களை நேரடி ஒளிபரப்பினார்கள். இத்தனை தமிழ் அமைப்புகள் இருப்பது அன்றுதான் தெரியும்.
மொரீஷியஸ் தமிழ் பண்பாட்டு மைய்யம்,
மொரீஷியஸ் தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு,
ரோஸ் ஹில் தமிழ் பண்பாட்டு மைய்யம்,
பீணிக்ஸ் தமிழ் மன்றம்,
காட் போன் (Quatre Borne) Marimen கோவில் தமிழ் சங்கம் (மாரியம்மன் கோவில் என்பது பிறகு தெரிந்தது),
போன்று ஏகப்பட்ட அமைப்புகள். இதில் பல அமைப்புகள் அவர் அவர் ஏரியாவில் விழா நடத்தினர். மொரீஷியஸ் தமிழ் பண்பாட்டு மைய்யம் மற்றும் மொரீஷியஸ் தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தியதுதான் பிரதான விழா. மொரீஷியஸ் பிரதம மந்திரி டாக்டர். நவீன்சந்திர ராம்குலாம் வந்து சிறப்பித்தார்.
இந்த விழா தொடங்கியது தமிழ் தாய் வாழ்த்துடன். மிக பெருமையாக இருந்தது. நிகழ்சியை தொகுத்து வழங்கிய பெண்மணி பிரதம மந்திரியை குத்து விளக்கு ஏற்ற அழைத்தது இப்படித்தான். "இப்போது மாண்புமிகு பிரதம மந்திரி டாக்டர். நவீன்சந்திர ராம்குலாம் குத்து விளக்கை ஏற்ற போவார்!". எல்லோரையும் இப்படித்தான் அழைத்தார். மற்றபடி மிக அழகான உச்சரிப்பு. பிரதமர் குத்து விளக்கேற்றி, தமிழின் பெருமையையும், தமிழர்கள் மொரீஷியஸ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பற்றி ஃப்ரென்ச்சில் விரிவாக பேசினார். இலங்கையில் நடக்கும் யுத்தம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கம் போல் பள்ளி மாணவ மானவியருக்கு பரிசுகள் வழங்கினார். இதுவும் முடிந்தபின், கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அனைவரும் மிக நன்றாக செய்தார்கள். அஜிதா என்ற பெண் "முன்பே வா, என் அன்பே வா" என்று மிக அழகாக, சுத்தமான உச்சரிப்புடன் பாடினார்.
வீணை, வயலின், மிருதங்கம், கஞ்சிரா, தபலா, ஆர்மோனியம் சகிதமாக, தாவணி அணிந்த அழகான பெண்கள் சுற்றி இருக்க, "தண்டபாணி தேசிகர்" என்பவர் நடுநாயகமாக அமர்ந்து chorus-ஆக கச்சேரி செய்தார். தமிழில் தான் பாடினார். பாடல் நினைவில்லை. பெயரை போல் இல்லாமல் கொஞ்சம் இளமையாகவே இருந்தார். மகாத்மா காந்தி கல்வி மைய்யம் என்று பெயர் போட்டார்கள்.
வெவ்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு, மாலை ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒரு பெண் "அலகா உன் அலகை அலகான தமிலில் அலகாக நான் பாடவா" என்று பாடினார். முருகன் மீதான பாடல் போலிருக்கிறது. முருகன் கேட்டிருந்தால் பதரிப்போய் "பாடாதே! வேண்டாம்!" என்று மென்னியை பிடித்திருப்பார். அவர் பக்கத்தில் பொம்மை போல் மொழுக் என்று அமர்ந்திருந்த சைனீஸ் குழந்தை தலையாட்டி ரசித்தது.
"ஸ்னேகிதி ஸ்னேகிதி" என்று பழைய தமிழ் மெகா தொடர் பாடலுக்கு பத்து தாவனிப்பெண்கள் நடனமாடினார்கள். (இந்த தொடர் அங்கு இப்போது ஒளிபரப்பாகிரது). தொட்டால் உடைந்து விடுவார் போல இருந்த பெண் நன்றாக ஆடினார். நன்றாக சிரித்தார்.
தமிழ் நாட்டுப்புற இசை என்று சொல்லி "அப்பா அம்மா விளையாட்டை விளையாடி பாப்போமா" போன்ற குத்து பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். (தமிழ் கலாச்சாரம் மற்றும் அதன் கலை வடிவங்களுக்கு தமிழ் சினிமாவால் எப்பேர்ப்பட்ட மோசமான சேதம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் போது நெஞ்சு பதைபதைக்கின்றது)
இவ்வாறு மொரீஷியஸில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது.
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in