தனியன்
தனியனின் வலைப்பதிவு
திங்கள், 26 செப்டம்பர், 2011
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்!?
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
உதைக்கும் ஓட்டு லாஜிக்...
நானும் குஜராத்தில் இலவசம் இல்லை, TASMAC இல்லை போன்றவற்றை பட்டியலிடும் மின்-அஞ்சலை படித்தேன்...
சரி, இலவசம் இலவசம் என்று மக்களை சோம்பேறிகளாக மாற்றி வைத்திருக்கும் அரசு வேண்டாம்; TASMAC திறந்து வைத்து, குடிமக்களை குடிகாரர்களாக மாற்றி வைத்திருக்கும் அரசு வேண்டாம் என்றெல்லாம் எண்ணி, இந்த தேர்தலில் ஓட்டு போட நினைத்திருந்தேன்.
ஆனால், நம் தமிழக அரசியல் காட்சிகள் அது முடியாது என்று சாட்டையால் அதித்த்தைப்போல் உணர வைத்திருக்கிறார்கள். நாமெல்லாம் வெறும் எந்திரங்கள் தாம். நமக்கு சிந்தனையெல்லாம் கூடாது. அது சினிமாவில் மட்டும் தான் நடக்கும் என்கிறார்கள்.
இந்த குஜராத் மின் அஞ்சலை படித்த நான், திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம் என்று போட்டி போட்டு பட்டியலிடும் அஞ்சலையும் படித்தேன்.
TASMAC திறந்து வைத்தது அதிமுக. இலவசம் கொடுத்தது திமுக. இப்போ களத்தில் இருப்பது இந்த இரண்டு கட்சிகள் தான். இப்போ எந்திரமான எனக்கு லாஜிக் உதைக்கிறது.
குஜராத் அஞ்சல் லாஜிக் படி பார்த்தால் எந்த காட்சிக்கும் ஓட்டு போட முடியாது. இலவச பட்டியல் அஞ்சல் படி பார்த்தாலும் இலவசங்கள் இல்லாத கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்கிறது லாஜிக். இளைய எந்திரங்கள் நம்பிக்கை வைத்திருந்த விஜயகாந்தும் அதிமுகவில் போய் கலந்து விட்டார். இப்போ என்ன செய்வது?
ஒரு if, else if இருந்தால், ஒரு else இருக்க வேண்டும் இல்லையா? அந்த else தான் 49-ஓ. ஆனாலும் ஓட்டு வீணாக கூடாது என்கிறது லாஜிக். மீண்டும் உதைக்கிறது. சக எந்திரங்கள் புதிய லாஜிக் ஏதும் வைத்திருந்தால் உடனடியாக மின்-அஞ்சல் செய்யவும். நானும் என் லாஜிக்கை Upgrade செய்து கொள்கிறேன்.
வியாழன், 9 டிசம்பர், 2010
Twitter தூக்கம்
புதன், 20 ஜனவரி, 2010
மொரீஷியஸ் – தமிழ் புத்தாண்டு 2009
மொரீஷியஸ் பற்றி எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டன. அது ஏன்... ஏழுதியே வெகு நாட்கள் ஆகி விட்டன. இன்று நாளை என்று எழுதாமல் தள்ளிபோட்டுக்கொண்டே வந்த விஷயம் (சோம்பேறி தனம் தான்!).
பொதுவாக மொரீஷியஸில் தமிழ் என்பது அந்த ஊர் ரூபாய் தாள்களிலும் (அந்த ஊரிலும் ரூபாய் (Rupee) தான்), கோவில்களிலும் மட்டுமே காண கிடைக்கும். மூண்றாம் தலைமுறை தமிழ் வம்சாவழியினர் இங்கு வாழ்கின்றண்ர். இவர்கள் சுத்தமாக தமிழை மரந்து விட்டனர். ஆனால் தமிழர் பண்டிகைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
சென்ற வருட (2009) தமிழ் புத்தாண்டிற்கு நான் மொரீஷியஸில் இருக்க நேர்ந்தது. அதே நாளில் வேறு ஒரு கிருத்துவ விசேஷமும் சேர்ந்து வர, நாடு முழுவதும் விடுமுறை. தெலுங்கு புத்தாண்டிற்கு விடுமுறை விட்டார்கள். தமிழுக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேட்டதற்கு, அடுத்த வருடம் விடுவார்கள் என்றார்கள்.ஒரு வருடம் தமிழுக்கு மறு வருடம் தெலுங்கிற்காம். தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு படங்களும் இப்படித்தான் ஒளிபரப்பாகும். ஒரு திங்கட்கிழமை அன்று தமிழ் படம், மறு வாரம் தெலுங்கு படம் என்று. ஆனால் வாரம் முழுவதும் ஏதாவது ஒரு பழைய தமிழ் மெகா தொடர்களை ஒளிபரப்புவார்கள்.
ஏப்ரில் 14 விடுமுறை என்பதால் முந்தினமே வாங்கி வந்த Bottle உடன் தொலைக்காட்சி முன்பு அமர்ந்தேன். (ஹி... ஹி... வேற என்ன வேல?) மொரீஷியஸில் இருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகள் நடத்திய விழாக்களை நேரடி ஒளிபரப்பினார்கள். இத்தனை தமிழ் அமைப்புகள் இருப்பது அன்றுதான் தெரியும்.
மொரீஷியஸ் தமிழ் பண்பாட்டு மைய்யம்,
மொரீஷியஸ் தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு,
ரோஸ் ஹில் தமிழ் பண்பாட்டு மைய்யம்,
பீணிக்ஸ் தமிழ் மன்றம்,
காட் போன் (Quatre Borne) Marimen கோவில் தமிழ் சங்கம் (மாரியம்மன் கோவில் என்பது பிறகு தெரிந்தது),
போன்று ஏகப்பட்ட அமைப்புகள். இதில் பல அமைப்புகள் அவர் அவர் ஏரியாவில் விழா நடத்தினர். மொரீஷியஸ் தமிழ் பண்பாட்டு மைய்யம் மற்றும் மொரீஷியஸ் தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தியதுதான் பிரதான விழா. மொரீஷியஸ் பிரதம மந்திரி டாக்டர். நவீன்சந்திர ராம்குலாம் வந்து சிறப்பித்தார்.
இந்த விழா தொடங்கியது தமிழ் தாய் வாழ்த்துடன். மிக பெருமையாக இருந்தது. நிகழ்சியை தொகுத்து வழங்கிய பெண்மணி பிரதம மந்திரியை குத்து விளக்கு ஏற்ற அழைத்தது இப்படித்தான். "இப்போது மாண்புமிகு பிரதம மந்திரி டாக்டர். நவீன்சந்திர ராம்குலாம் குத்து விளக்கை ஏற்ற போவார்!". எல்லோரையும் இப்படித்தான் அழைத்தார். மற்றபடி மிக அழகான உச்சரிப்பு. பிரதமர் குத்து விளக்கேற்றி, தமிழின் பெருமையையும், தமிழர்கள் மொரீஷியஸ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பற்றி ஃப்ரென்ச்சில் விரிவாக பேசினார். இலங்கையில் நடக்கும் யுத்தம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கம் போல் பள்ளி மாணவ மானவியருக்கு பரிசுகள் வழங்கினார். இதுவும் முடிந்தபின், கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அனைவரும் மிக நன்றாக செய்தார்கள். அஜிதா என்ற பெண் "முன்பே வா, என் அன்பே வா" என்று மிக அழகாக, சுத்தமான உச்சரிப்புடன் பாடினார்.
வீணை, வயலின், மிருதங்கம், கஞ்சிரா, தபலா, ஆர்மோனியம் சகிதமாக, தாவணி அணிந்த அழகான பெண்கள் சுற்றி இருக்க, "தண்டபாணி தேசிகர்" என்பவர் நடுநாயகமாக அமர்ந்து chorus-ஆக கச்சேரி செய்தார். தமிழில் தான் பாடினார். பாடல் நினைவில்லை. பெயரை போல் இல்லாமல் கொஞ்சம் இளமையாகவே இருந்தார். மகாத்மா காந்தி கல்வி மைய்யம் என்று பெயர் போட்டார்கள்.
வெவ்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு, மாலை ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒரு பெண் "அலகா உன் அலகை அலகான தமிலில் அலகாக நான் பாடவா" என்று பாடினார். முருகன் மீதான பாடல் போலிருக்கிறது. முருகன் கேட்டிருந்தால் பதரிப்போய் "பாடாதே! வேண்டாம்!" என்று மென்னியை பிடித்திருப்பார். அவர் பக்கத்தில் பொம்மை போல் மொழுக் என்று அமர்ந்திருந்த சைனீஸ் குழந்தை தலையாட்டி ரசித்தது.
"ஸ்னேகிதி ஸ்னேகிதி" என்று பழைய தமிழ் மெகா தொடர் பாடலுக்கு பத்து தாவனிப்பெண்கள் நடனமாடினார்கள். (இந்த தொடர் அங்கு இப்போது ஒளிபரப்பாகிரது). தொட்டால் உடைந்து விடுவார் போல இருந்த பெண் நன்றாக ஆடினார். நன்றாக சிரித்தார்.
தமிழ் நாட்டுப்புற இசை என்று சொல்லி "அப்பா அம்மா விளையாட்டை விளையாடி பாப்போமா" போன்ற குத்து பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். (தமிழ் கலாச்சாரம் மற்றும் அதன் கலை வடிவங்களுக்கு தமிழ் சினிமாவால் எப்பேர்ப்பட்ட மோசமான சேதம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் போது நெஞ்சு பதைபதைக்கின்றது)
இவ்வாறு மொரீஷியஸில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது.
வெள்ளி, 11 டிசம்பர், 2009
மகாகவியின் பிறந்த தினம்
ஞாயிறு, 25 அக்டோபர், 2009
ஒரு பதிவு
வெகு நாட்களாக எழுத வில்லை. பதிவு போட சாரங்கலள் ஏகபோகமாக இருந்தும், ஒரு சோம்பேரி தனம். நேரமின்மை என்று சொல்வது சரியல்ல. பொய்யாகும்.
இந்த வலைபதிவை துவக்கும்முன் தமிழ் பதிவுலகம் எப்படி இருந்தது என்று நான் கவனிக்கவில்லை. அறிய முனையவும் இல்லை. ஆனால் இந்த இடைவெளியில் ஒரு சிறிய அறிமுகம் ஏற்பட்டது.
பெரும்பாலும் அரசியல், சினிமா மற்றும் ஈழம் பற்றியே உள்ளன. இதில் பதிவர்கள் இடையில் நடக்கும் மோதல்கள், அடிதடி ரகளைகள்..
சில நல்ல பதிவுகளும் சிக்கின. சிறுகதைகள், கவிதைகள், பயண கட்டுரைகள் என்று. இபபோது தொடுப்புகள் கொடுக்க் முடியவில்லை. வேறு ஒரு சந்தர்பத்தில் தருகிறேன்.
செவ்வாய், 23 ஜூன், 2009
சாரி
“டேய். பொறுக்கி நாயே!”
“என்னங்க? யாருங்க?”
“நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல?”
“என்னம்மா? என்ன பிரச்சன?”
“உன்னையெல்லாம் நடுத்தெருவுல நிக்க வச்சி செருப்பால அடிக்கணும்”
“டேய் அட்ரா அவன… புட்ரா”
“இருங்க! இருங்க!! ஏங்க என்னன்னு சொல்லுங்க? யோவ்! மேல கை வைக்காத!!”
“யே! இருங்கப்பா. யோவ்! இருய்யா. அவன அடிக்காத. பாவம். ஏம்மா! உன்மேல கை வச்சவன் அதோ இறங்கி ஓடுறான் பாரு”
“யோவ்! என்னய்யா கண்டக்டர் நீ? ஓடுறான் பாத்துக்கிட்டே இருக்க?”
“ஆமாயா… உங்களோட மல்லு கட்டூரத்தே பெரிய வேல. இதுல இது வேறயா?”
“சாரி.. ப்லீஸ் சாரி சாரி. அய்யோ… நீங்கன்ணு தப்பா நெனச்சிட்டேன்..”
“வெரி சாரி. சாரி சாரி… ப்லீஸ் மன்னிச்சுடுங்க…”
ஒருபுறமாய் தலை சாய்த்து
இரு விழிகளும் மன்றாட
முகம் வேளிறி, வேர்த்து கொட்ட
உண்மையாக, உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாய்.
நீ இவ்வளவு அழகாய் “சாரி” சொல்வதானால்
நான் இன்னொரு முறை அடி வாங்க தயார்.
உதடு கிழிந்த குருதியை உன் கைக்குட்டையால்
துடைத்து விடும்போது “ஸ்ஸ்ஸ்ஸ்” என்று
பொய் வலி காட்டினால்,
நீயும் “ஸ்ஸ்ஸ்ஸ்” என்று மேலும் இருமுறை
“சாரி சாரி…”
நீ என் நெஞ்சில் குத்தி விட்டு
இதே போல் அழகாய் மன்னிப்பு கேட்டால்
சத்தியமாய் மன்னித்து விடிவேன்
ஒரு வேளை மன்னிக்காமல் இருந்தால்
நிச்சயம் இறந்திருப்பேன்